Sunday, September 30, 2007

ரமலான் சிந்தனைகள் - 17

ரமலான் சிந்தனைகள் - 17

தேனீயைப் போல் வாழ்வோம்

மனிதனாகப் பிறந்து விட்டோம்.

நம்மை மலை போல் பல துன்பங்கள் சூழுகின்றன.

இருந்தாலும், அவற்றைக் கண்டு மலைத்து விடக் கூடாது என்பதே இன்றைய ரம்ஜான் சிந்தனை.

குர்ஆனில் தேனீக்களின் வாழ்க்கை முறை பற்றி சொல்லப்பட்டுள்ளது.

அவற்றின் வாழ்க்கையைப் பார்த்து மனிதன் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன.

தேனீக்கள் மிக மிக உயரமான இடங்களில் கூட அடுக்கடுக்காய் அழகிய சதுரக் கூடுகளைக் கட்டி விடுகின்றன.

இந்த திறமையை மனிதவியலோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.

தேனீக்கள் உயரத்தைக் கண்டு எப்படி மலைப்பதில்லையோ, அவ்வாறே மனிதனும் தன் கடமை எவ்வளவு கடினமானதாயினும் மலைக்கவோ, தயங்கவோ கூடாது.

மரம், செடி, கொடிகளின் பாகங்களில் இருந்து அவை தேன் எடுத்து வருகின்றன.

இந்தத் தேனை அவை எப்படி கண்டுபிடித்து எடுக்கின்றன?

இது எப்படி சாத்தியமாகிறது?

மனிதனால் இப்படி பூவில் இருந்து தேன் எடுக்க முடியுமா?

நுண்ணிய ஆராய்ச்சி செய்தால்தான் இது போன்ற சாதனைகள் சாத்தியமாகும்.

மனிதனும், தேனீயைப் போல் நுண்ணறிவு பெற வேண்டும் என்பதை இது காட்டுகிறது.

தேன் எடுக்கச் செல்லும் வண்டுகள், வந்த வழியை மறக்காமல் அதே வழியில் மீண்டும் திரும்புகின்றன.

மனிதன் வெற்றி பெற்ற பிறகு, வந்த வழியைத் திரும்பிப் பார்க்க வேண்டும்.

தன் வெற்றியின் மூலம், அவன் பணக்காரனாகி விட்டாலும் கூட, அதன் பின்னணியில் இருப்பவர்களையும், முன்பு என்ன நிலையில் இருந்தோம் என்பதையும் மறந்து விடாமல் நினைத்துப் பார்க்க வேண்டும்.

இப்படி, தேனீக்கள் போலவே வாழ கற்றுக் கொள்வோம்.

இது தினமலர் நாளிதழில் வெளியாகும் சிந்தனைகளின் தொகுப்பே அன்றி வேறில்லை!

No comments: